2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மோட்டார் குண்டுகள் மீட்பு

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

அரியாலை 3ஆம் குறுக்கு தெரு பகுதியில் உள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட ஏறிகணை குண்டுகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் திங்கட்கிழமை (24) மாலை செயலிழக்க செய்யப்பட்டதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் குண்டுகள் தென்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, ஏழு மோட்டார் எறிகணை குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய, குறித்த குண்டுகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அழிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .