2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'மேலான பக்தி சீரான வாழ்வைத் தரும்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் எப்படிப்பட்ட பெரிய நிலையிலுள்ள மனிதர்களாயினும் சரி, அதனால் உண்மையான பெருமை இல்லை. இறைவனுக்கு அடிமையாக வாழ்வதுவே உயர்ந்த ஆன்ம நிலையாகும். பரம்பொருளை நினைத்து சிரம் தாழ்த்தலே பேரானந்தம்.

எங்கள் ஆசைகள், ஆணவம், அகம்பாவங்கள், கோபம், பொறாமை, காழ்ப்பு எல்லாமே அடங்கி ஒடுங்கி அறவே அகலும் இடம் இறைவன் திருவடி நிழல்தான் என்பதை உணர்வோமாக.

மனிதர்கள் கடவுளிடம் தாழ்ந்து நின்றால் அவர்களை அவரே உயர்த்தி வைப்பார் என்பதில் சந்தேகம் கொள்ளற்க.

ஆண்டவனிடம் பக்தி கொள்பவர்களுக்கு அவர் கருணை மீது சந்தேகம் எழுவதுமில்லை. 

இறுகப் பூட்டிய இதயக் கதவை உடைத்து உள்ளே கருணை பாய்ச்சும் தலைவனைச் சரண் அடைக. மேலான பக்தி சீரான வாழ்வைத் தரும். 

வாழ்வியல் தரிசனம் 27/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X