2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வித்யா கொலை வழக்கிலிருந்து இருவர் விடுவிப்பு

George   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய 10 ஆம் 12 ஆம் சந்தேகநபர்களை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜோய்மகிழ் மகாதேவன், இன்று  (28) விடுவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய 10 ஆம் 12 ஆம் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களுக்கும் எதிராக சாட்சியங்கள் எவையும் இல்லாத காரணத்தாலும், மேலும் அவர்களை தடுத்து வைப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்ற காரணத்தாலும் குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என பதில் நீதவான் தெரிவித்தார்.

மாணவி, 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இருவர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .