2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம்

Thipaan   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கே.எல்.ரி.யுதாஜித்

 

தந்தை செல்வாவின் 40ஆவது நினைவு தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இந்நிகழ்வு, எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 03.00 மணியளவில் களுதாவளை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், இலங்கை சோசலிசக் குடியரசின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு தமிழர் தலைவருக்கு அகவணக்கம் செலுத்துவதோடு, அவர்தம் வரலாற்றுத் தடங்களையும், தமிழர் தம் அரசியல் நெறிமுறைகளையும் அறிந்து தெளிவடையுமாறு அன்போடு அழைக்கிறோம்.

அத்துடன், எதிர்வரும் 2017.05.01ஆம் திகதி அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பொது மைதானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினரால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். எனவே இந்நிகழ்விலும் தமிழ் அபிமானிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வையும் சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .