2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கிண்ணியா பகுதியில், உளநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டின்பேரில்   கைதுசெய்யப்பட்ட 2 சந்தேகநபர்களையும் எதிர்வரும்  4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற  நீதவான் எம்.எச். எம்.ஹம்சா,  இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.

கிண்ணியா நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த  யூ.எல்.சாவுல் ஹமீட் (வயது 55),  முஹிதீன் பாவா அபூ ஹனீவா (வயது 54) ஆகியோரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .