2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

 39ஆவது நாளாக தொடரும் போராட்டம்

George   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, பன்னங்கண்டி சரஸ்வதி கமம் பகுதியில் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம் ஒருமாத காலத்தைத் கடந்த நிலையில் 39ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி, பன்னங்கண்டியில் தனியாருக்கு சொந்தமான சரஸ்வதி கமம் பகுதியில் 1990ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வரும் குடும்பங்கள், தமக்கான காணி உரிமங்களை வழங்கி வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்குமாறு கோரி, கடந்த 38 நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“குறித்த போராட்டமானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் காணி என்ற விடயம் என்பதால், இதற்கான தீர்வை வழங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் காணி உரிமையாளருடன் பேசி ஒரு சுமூகமான முடிவை பெற வேண்டியுள்ளது” என்று, அரச அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .