Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து ஏழு வயதுச் சிறுமி மீது விழுந்ததில், அச்சிறுமி பலியாகியுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை (29) பகல் நடந்த இச்சம்பவத்தில், படமாளிகை வீதியைச் சேர்ந்த சண்முகராசா ஷாறுக்கா (வயது 7) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சிறுமியும் அவரது சகோதரனும் விளையாடிக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த மதில் கடந்த 4 நாட்களுக்கு முன்னரேதான் கட்டி முடிக்கப்பட்டது என்று வீட்டுரிமையார்கள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த சிறுமியை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் ஏற்கெனவே சிறுமி உயிரிழந்துவிட்டாரென, வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார், விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .