2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கிழக்கின் கல்வி வளர்ச்சிக்கு புதிய செயற்பாடுகள் ஆரம்பம்’

Niroshini   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

“மத்திய மாகாண கல்வி அமைச்சு இணைந்து கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். நாட்டை நாங்கள் முன்னேற்றுவோம். ஆனால், பிள்ளைகள் முன்னேற்றமடைய வேண்டும். சமூகம் முன்னேற வேண்டுமானால் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளின் முன்னேற்றமடைய வேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நுற்றாண்டினை முன்னிட்டு நடைபெற்ற சகாப்த விழா, இன்று சனிக்கிழமை (29) நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் மக்கள் சமாதான வாழ்வதை விரும்பாத சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். திடீரென புத்த சிலை அல்லது பௌத்த விகாரை, இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாயல்களை அடிப்படையாக வைத்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.

பௌத்தம், இந்து, இல்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத போதனைகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஒவ்வொரு பிரச்சினைகள் ஏற்படும்போதும் சம்பந்தபட்ட எல்லோரும் முன்னே வருவதால் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியது மிவும் அவசியமாகும். இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு கடும் போக்காளர்கள் சதி செய்கின்றார்கள்.

இந்த சிறிய நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும். இந்த சகோதரத்துவத்தை உருவாக்குவதற்கு அரசியல்வாதிகளால் மாத்திரம் முடியாது, அனைத்து தரப்பினருடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பௌத்த, இந்து, இல்லாமிய மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்” என்றார்.

 நாட்டிலுள்ள மாகாணங்களில் கிழக்கு மாகாணம் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்வியில் பின்நோக்கி காணப்படுகிறது.  வடக்கு - கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்ற போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாணம் கல்வியில் முன்னேற்றமடைந்துள்ளது” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .