2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கணினி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2017 மே 12 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை செவிப்புலனற்ற மற்றும் வாய் பேசாத மாணவர்களுக்கான பாடசாலைக்கு, திருகோணமலை ரொட்டரி கழகத்தின் சார்பில் ரூபாய் 265,000  பெறுமதியான கணினி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருகோணமலை ரொட்டரி கழகம் சார்பாக சமுதாயப்பணி இயக்குநர்  ஜெயரட்ணம், பாடசாலையின்  ஆளுநரான திருமதி ரஞ்சி.பாலசிங்கத்திடம் கணினி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இவ் வைபவத்தில் ரொட்டரி கழகம் சார்பாக  வைத்திய கலாநிதி ஞானகுணாளன், கிருபாகரன், சக்திபவன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து  பாடசாலை மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான கைவினை பொருள்கள் அடங்கிய கண்காட்சியை காட்சிப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X