2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைகலப்பில் ஒன்பது பேர் படுகாயம்

Suganthini Ratnam   / 2017 மே 17 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, ரொட்டவெவ  பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (16)  மாலை இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த 9 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு  அயல் வீடுகளைச் சேர்ந்தோருக்கிடையில் ஏற்கெனவே முரண்பாடு இருந்துவந்த நிலையில்,  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளானார். இதனை அடுத்து ஏற்பட்ட கைகலப்பில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த 9 பேரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடனர். இவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .