Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 17 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ரொட்டவெவ பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த 9 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அயல் வீடுகளைச் சேர்ந்தோருக்கிடையில் ஏற்கெனவே முரண்பாடு இருந்துவந்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளானார். இதனை அடுத்து ஏற்பட்ட கைகலப்பில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 9 பேரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடனர். இவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .