2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விளையாட்டுப்போட்டி...

Kogilavani   / 2017 மே 17 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில்,  விசேட தேவையுடையோர் பிரிவில் கல்வி கற்றுவரும் மாணவர்களை, விளையாட்டுத்துறையில் ஊக்குவிக்கும் நோக்கில், விளையாட்டுப்போட்டி, அண்மையில் பாடசாலை மைதானத்தில் நடத்தப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஆர்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில், விசேட தேவையுடைய 20 மாணவர்கள் கலந்துகொண்டு தமது விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஆசிரியர் ஆலோசகர் திருமதி மங்களேஸ்வரி மற்றும் வகுப்பாசிரியர்களான திருமதி குமுதினி, திருமதி ராதிகா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .