2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

மன்னாரில் பிரதமர்...

Menaka Mookandi   / 2017 மே 19 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலகத்தின் 4 மாடிக் கட்டடத் தொகுதியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை, வைபவ ரீதியாகத் திறந்துவைத்து, மக்களின் பாவனைக்காகக் கையளித்தார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதியுதவியுடன், 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாவட்டச் செயலகக் கட்டடத் தொகுதி, திறப்பு விழா நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.

இதில், அமைச்சர்களான வஜீர அபேவர்த்தன, ரிஷாட் பதியுதீன், டீ.எம்.சுவாமிநாதன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான், மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்டச் செயலக மைதானத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, காணி உறுதிப்பத்திரங்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .