வெள்ளிக்கிழமை, 18 மே 2012

ஹொண்டுராஸ் சிறையில் தீ: 272 பேர் பலி

 

மத்திய  அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தபட்சம் 272 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொமாயாங்குவா நகரிலுள்ள சிறைச்சாலையில் புதன்கிகிழமை காலை இத்தீவிபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதற்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகளின் கலகம் காரணமாக அல்லது மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஹொண்டுராஸ் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி டானியெலோ ஒரெல்லானா கூறியுள்ளார்.


 

Views: 726

Comments   

 
0#Abdul Salam2012-02-16 05:44
சிறை கைதிகள் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.