ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த ஆறு நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் நிறுத்தியுள்ளதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சியான பிரஸ் ரீவி இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தமைக்கு பதிலடியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரான்ஸ், கிறீஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து,போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ஈரானிய அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டு ஈரானின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் எண்ணெய் குறித்து கலந்துரையாடப்படவில்லை என ராஜதந்திர ஒருவர்கூறியதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
ஈரானின் அறிவிப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுசக்தி ஆணையாளர் குவென்தர் ஒட்டின்ஜர் கூறுகையில், 'எண்ணெயை சர்வதேச சந்தையில் பெற்றுக்கொள்ளலாம். தான் உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
ஒபெக் அமைப்பிலுள்ள நாடுகளில் சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி நாடாக ஈரான் உள்ளது. அங்கு தினமும் 3.5 மில்லியன் பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றில் 2.5 மில்லியன் பீப்பா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


Comments
அதற்கு ஈமான் உறுதியானால் மட்டும் தான் முஸ்லிம் உம்மாவுக்கு விடுதலை அதக்காக தனியாகவோ கூட்டாகவோ இறைவனை பிராத்திப்போம்.
RSS feed for comments to this post