(கவிசுகி)
யாழ்.கோண்டாவில் கிழக்கு குமரன் கோட்டப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை வேம்பு மரம் தறித்துக் கொண்டு இருந்த நிலையில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோயிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சற்குணம் (வயது 42) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் தொடர்பாக மானிபாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

