வெள்ளிக்கிழமை, 18 மே 2012

பத்திரிகையில் வெளியான படத்தில் காணாமல்போன இரு மகன்மார்: தாயார் மன்றாட்டம்

 

(கவிசுகி)

வன்னிப் பகுதியில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான கடந்த 2009.05.15 இல் இராமாவில் முகாமிலிருந்து காணாமல் போன தனது மகன்மார்கள் இருவர் பத்திரிகை புகைப்படம் ஒன்றில் இருப்பதாகவும் அவர்களை தேடிக் கண்டுபிடித்து தருமாறும் இலங்கை மனித உரிமைகள் யாழ். பிராந்திய அலுவலகத்தில் தாயொருவர் இன்று புதன்கிழமை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். திருநெல்வேலி பால்பண்ணை வீதியைச் சேர்ந்த ஜெயவீரசிங்கம் செல்வராணி என்ற தாயே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

ஜெயவீரசிங்கம் கஜந்தன், ஜெயவீரசிங்கம் இராயந்தன் ஆகிய இரு சகோதரர்களே இராமாவில் முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் எனவும் இவர்கள் இருவரும் காணாமல் போனமை தொடர்பாக ஜ.சி.ஆர்.சி. யிலும் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

உள்ளூர் பத்திரிகை இரண்டில் கட்டுரைப் பகுதியில் வெளியான படத்தில் தனது மகன்மார்கள் இருப்பதாகவும் எனவே  அவர்கள் இலங்கையின் எந்த மூலையிலாவது இருக்கக் கூடும் எனவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தருமாறும் அத்தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: 1125

Comments   

 
0#pasha2012-02-23 03:03
தேடி கொடுங்கள். புண்ணியம் கிடைக்கும்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.