.jpg)
(எஸ்.ஜெனி)
மன்னாரில் இருந்து சங்குப்பிட்டி வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு இலங்கை அரச போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை பஸ்கள் நீண்டகாலமாக சேவையில் ஈடுபடாமை குறித்து மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து சங்குப்பிட்டி வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அரச பஸ்கள் எவையும் சேவையில் ஈடுபடுவதில்லை.
எனவே மன்னார் சாலையில் இருந்து சங்குபிட்டி வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு அரச பஸ் ஒன்றை உடன் சேவையில் ஈடுபடுத்துமாறு மன்னார் பயணிகள் மன்னார் சாலை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

