(எஸ்.ஜெனி)
மகாசிவராத்திரியை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலுக்கு வியாபாரப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென்று மரணமடைந்துள்ளார்.
அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த முகம்மது சலீம் (வயது 49) என்பவரே இவ்வாறு மரணமடைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது சடலம் மன்னார் பொதுவைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது.

