ரி.விவேகராசா
வவுனியா கொக்குவெளி இராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 278 இராணுவ வீரர்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் பிரிகேடியர் மைத்திரி டயஸ் உள்ளிட உயர் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு இவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்கினார்கள்.

