(ரி.எல்.ஜௌபர்கான்)
தேசிய சிறைக்கைதிகள் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதனையொட்டிய கொடி வாரத்தின் முதல் நாளான இன்று முதலாவது கொடி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு அணிவிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் நாளை திங்கட்கிழமை கொடிவாரத்தின் முதல்நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலை நலன்புரி அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். தொடர்ந்து 7 நாட்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் வாரம் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

