
(ஆர்.அனுருத்தன், எல்.தேவ்)
1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தங்கியிருந்தவேளை சீருடையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் 174 பேரின் 20ஆவது ஆண்டு நினைவு கூறும் வகையில் இன்று அப்பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தளங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக வளாக பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.







