(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 115.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான மைய கடமை நேர அதிகாரி எம்.ஐ.ஏ.நயீம் தெரிவித்தார்.
இதேவேளை, இங்கு தொடந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறே காணப்படுவதாகவும், கடல் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் இடைக்கிடை பலத்த காற்று வீசக்கூடும் எனவும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவதானமாக இருக்கும் படியும் அவர் தெரிவித்தார்.


Comments
RSS feed for comments to this post