.jpg)
(ஏ.ஜே.எம்.ஹனீபா, அப்துல் அஸீஸ்)
அரசாங்கத்தின் எரிபொருள் மானியம் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திலுள்ள வருமானம் குறைந்த மண்ணெண்னை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மானிய அட்டை வழங்கும் நிகழ்வு இன்று மாலை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் பீ.இ அரசரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.செல்வராஜா, பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவீதரன், சமுர்த்தி முகாமையாளர் எச்.எம்.அப்துல் அலீம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
.jpg)

