.jpg)
(கஜன்)
கடந்த புதன்கிழமை புல்மோட்டை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்களும் நேற்று மாலை திருகோணமலையிலிருந்து இந்தியாவுக்கு பயணமாகினர்.
இம் மீனவர்களை விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதனையடுத்து இம் மீனவர்கள் தமது 6 படகுகள் சகிதம் நேற்று மாலை இந்தியா நோக்கி பயணமாகினர்.
இவர்களை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் திருகோணமலை இறங்கு துறையில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)

