(சி.குருநாதன்)
திருகோணமலை அருள்மிகு கும்பத்துமால் ஸ்ரீகருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வருகின்ற மாசிமக அலங்காரத் திருவிழாவின் நிறைவாக நாளை புதன்கிழமை காலை 7.30 மணியளவில் தீர்த்தோற்சவமும் பின்னர் வீதி வழியாக சுவாமி வலம் வருதலும் நடைபெறவுள்ளது.
அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்ற இத்தினங்களில் காலை, மாலை வேளைகளில் விசேட அபிஷேகங்களும் சுவாமி உள்வீதி வலம் வருதலும் நடைபெறுகின்றது.
.gif)
