(எஸ்.சுவர்ணஸ்ரீ, ஆர்.கமலி)
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை மேற்கொண்ட முதியவரொருவர் மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
சிவனொளிபாத மலையிலுள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்கென மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணமானவர் அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவர் என அடையாளம் கண்டுள்ள பொலிஸார், இம் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

