செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

நீர்கொழும்பு மீனவர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

 

(கே.என்.முனாஷா)

கடற்றொழில் நடவடிக்கைகளிலிருந்து கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி முதல் இருந்து ஒதுங்கி இருந்த நீர்கொழும்பு மீனவர்கள் இன்று திங்கட்கிழமை பிற்பகல் தமது எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட தீர்மானித்துள்ளதாக, நீர்கொழும்பு கடற்கரை வீதி மற்றும் குடாபாடுவ ஐக்கிய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபையில் பிரதி அமைச்சர் சரத் குணரட்ன மற்றும் மேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிமல் லன்சா ஆகியோருடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

சிறிய ரக படகுகள் மூலம் மின் பிடித்தலில் ஈடுபடும் நீர்கொழும்பு மீனவர்களுக்கு நாளை முதல் 25 ரூபா விலை குறைக்கப்பட்டு 81 ரூபாவுக்கு மண்ணெண்ணெய்யை மீனவ கூட்டுறவு சங்கங்களின் எரிபொருள் விற்னை நிலையங்கள் ஊடாக வழங்கள் என்ற தீர்மானத்தையடுத்தே எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதற்கான சுற்று நிருபத்தை தயாரித்துள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Views: 112

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.