(கே.என்.முனாஷா )
கற்றக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவும் எரிபொருள் விலை அதிகரிப்பும் எனும் தொனிப்பொருளில் பகிரங்க கருத்தரங்கொன்று எதிர்வரும் சனிக்கிழமை நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது.
சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் குரே நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்தர்களான பிரிட்டோ பெர்னாந்து மற்றும் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன உள்ளிட்ட பலர் இக்ருத்தரங்கில் உரையாற்றவுள்ளனர்.

