(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
கற்பிட்டி விஜய கடற் படையின் 25ஆவது வருட நிறைவை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் செவ்வாய்க்கிழமை வரை விஷேட நடமாடும் முகாமொன்று நடைபெறவுள்ளது.
கற்பிட்டி விஜய கடற்படையின் கட்டளைத் தளபதி கெப்டன் எல்.எச்.ஆர். லீலாவல தலமையின் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
இந்த ஒரு வார காலத்திற்கு டெங்கு ஒழிப்பு மற்றும் சமூக சேவைகள் என்பன இடம்பெறவுள்ளதுடன், கற்பிட்டி பிரதேசத்தில் கல்வி பயிலும் வரிய மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

