செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

உரிய ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிள் வைத்திருந்த 24 பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை

 

ஹசகல பொலிஸ் நிலயைத்தைச் சேர்ந்த 24 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தமது பிரத்தியே மோட்டார் சைக்கிள்களுக்கு செல்லுபடியான அனுமதிப்பத்திரம், வரிஅனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரம் ஆகியவற்றை வைத்திருக்காததால் அவர்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளார்.

கண்டி பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பி. அம்பன்வெலவின் உத்ரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் உதவி இன்ஸ்பெக்டர்கள், சார்ஜன்ட்டுகள், கான்ஸ்டபிள்கள் ஆகியோரும் அடங்குகின்றனர். (சண்டே டைம்ஸ்)
 

Views: 601

Comments   

 
0#neethan2012-02-19 20:53
குற்றம் நிருபிக்கபட்டால் அதி உச்ச தண்டனை வழங்கப்படுமா அல்லது பத்தோடு பதினொன்றாக கிடப்பில் போடப்படுமா? ஒரு நிலையத்தில் எண்ணிக்கை எதுவென்றால் நாடு முழுவதும்.......? கற்பனை பண்ணமுடியவில்லை, இவர்களிடம் இருந்து நாடு சட்ட, ஒழுங்குளை நிலைநிறுத்துவதை எப்படி எதிர்பார்க்கலாம்?
Reply
 
 
0#riswan2012-02-20 01:36
லஞ்சம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
Reply
 
 
0#சிறாஜ்2012-04-06 09:19
இன்னும் இருக்கும் பாருங்க சார்
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.