சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட நிலையில் ஸ்பானிய படையினரால் காப்பாற்றப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.எஸ்.கே.கே. வீரசிறி, பெருமாள் செல்வராஜன், வர்ணகுலசூரிய சாந்த செபஸ்தியான், தினேஷ் சுசந்த பெர்னாந்து, ஜுட் நிசாந்த பெர்னாந்து, வர்ணகுலசூரிய ஜேசுதாஸ் லியோன் ரொட்ரிகோ ஆகிய மீனவர்களே சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பானிய படையினரால் காப்பாற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பினர்.
நாடு திரும்பிய மீனவர்களை அவர்களது உறவினர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். (தீபா அதிகாரி,கே.என்.முனாஷா )
.gif)
