செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

நயினாதீவில் பல் கலாசார நிகழ்ச்சி

 

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையுடன் நயினாதீவு மேகலை அரங்கில் நேற்று இரவு பல் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

வேலணைப் பிரதேச செயலர் மு. நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் திருமதி.எம்.எஸ்.விக்கிரமசிங்க, யாழ். அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார், வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எம்.பி.வீரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலாசார நிகழ்வுகளாக நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்களின் நடனம், பண்ணிசை, இஸ்லாமிய நடனம், வவுனியா தெற்கு மாணவர்களின் நடனம், கிராமிய நடனம் என்பனவும் இடம்பெற்றன. (படங்கள் :- ராஜா)


 

 

Views: 500

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.