நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு ஆதரவாக 160 இற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதைத் தெரிவித்தார்.
அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் ஐ.தே.க. எம்.பி.கள் சிலரினதும் ஆதரவை ஆரசாங்கம் ஏற்கெனவே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

