எதிர்க்கட்சியினர் வலிமையான வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் வரை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களிலும் தான் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஐ.தே.க. அதிக எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


Comments
RSS feed for comments to this post