செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

காத்தாமுத்து சக்திவேல் (Retired Senior Engineer – Sri Lanka Telecom)

 

மரண அறிவித்தல்

பிறப்பு : 16-08-1951
இறப்பு : 15-11-2011


 
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட காத்தாமுத்து சக்திவேல் (Retired Senior Engineer – Sri Lanka Telecom) 15-11-2011 செவ்வாய்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற காத்தாமுத்து – சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற முத்துலிங்கம் - விருத்தாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும், ஜீவராணியின் அன்புக் கணவரும், பிரதீபா, ஜெயதீபா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், இளங்கோவின் அன்பு மாமனாரும், ராதாதேவி, சுசிலாதேவி, ஞானவேல் ரஞ்சிதாதேவி, ராசவேல், வெற்றிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும், குழந்தைவேல், பாலகிருஷ்ணன், பவானி, பாலசந்திரன், செல்வலக்ஷ்மி, திருமதி வெற்றிவேல், ஏரம்பமூர்த்தி, ஜெயராணி, சிவராசா, விஜயராணி, ராசநாயகி, ரகுநாதன், ரங்கராஜன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நேற்று புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை 2 மணியளவில் நடைபெற்று கல்கிஸை பொது மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- ச.செந்தூரன் (மகன்)
TP- 011-2365368

Views: 201

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.