செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இலங்கை - இந்திய போட்டி சமநிலையில்

 

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. முக்கோண கிண்ண கிரிக்கெட்த் தொடரில் இன்று நடைபெற்ற இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவுற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியும் 50 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 236 ஓட்டங்களையே  பெற்றது.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள்  கைவசமிருந்த நிலையில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. எனினும் அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 8 ஓட்டங்களை மாத்திரமே இந்திய அணி பெற்றது.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சமநிலையில் முடிந்த 26 ஆவது போட்டி இதுவாகும்.


 

Views: 976

Comments   

 
0#Jeyeroopen2012-02-15 04:18
அம்மாடி இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு இதிலாவது சமன் செய்தார்கள். இல்லாட்டி நம்ம ஹீரோக்கள் மனசு உடைந்து போய் இருப்பார்கள்.
Reply
 
 
0#Hussain2012-02-15 20:53
இந்த செய்தி தவறானது. கடைசி ஓவரில் பத்து ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் ஒன்பது ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டத்கு இந்திய அணி. நாற்பத்தி ஒன்பதாம் ஓவரில் பதினான்கு ஓட்டங்கள் பெறப்பட்டது என்பதே சரியான செய்தியாகும்.
Reply
 
 
0#Aathiff2012-02-16 02:09
புதிய சர்ச்சை ஒன்று தோன்றி இருப்பதாக ஒரு தகவல் ..............
இலங்கை அணி 30வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசியதாகவும் நடுவர் ஐந்து பந்துகளுடன் ஓவர் முடிவுட்டதாக அறிவித்ததாகவும் ஊர் தகவல் உலா வருகின்றது.
இது உண்மையா ??????
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.