செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இலங்கை அணிக்கு 41 ஓவர்களில் 152 ஓட்ட இலக்கு

 

சி.பீ. கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 41 ஓவர்களில் 152 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் நடைபெறும்  இப்போட்டி மழை காரணமாக தலா 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில்  158 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வேர்த் - லூயிஸ் விதிகளின்படி இலங்கை அணிக்கு 41 ஓவர்களில் 152 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்ட்டது.

அவுஸ்திரேலியஅணியில் டேவிட் ஹஸி 58 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கைப் பந்துவீச்சாளர்களில்   பர்வீஸ் மஹ்ரூவ் சிறப்பாக பந்துவீசி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  திசேர பெரேரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

Views: 297

Comments   

 
0#meenavan2012-02-18 01:26
இலங்கை அணியின் சிறந்த பந்துவீச்சும், களத்தடுப்பும் ,வெற்றி இலக்கை இலங்கைக்கு சாதகமாக்கி உள்ளது, துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.