செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

5 ஆவது இரட்டைச் சதம் குவித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 5 ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று பூர்த்தி செய்தார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான இன்று டெண்டுல்கர் 203 ஓட்டங்களைப் பெற்றார்.

347 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 23 பௌண்டரிகளையும் விளாசினார்.

இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் பெற்ற 4 ஆவது வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர் ஆவார். இதற்குமுன் ஸ்ரீபன் பிளெமிங் (274) பிரையன் லாரா (221) வீரேந்தர் ஷேவாக் (201) ஆகியோர் ஏற்கெனவே இலங்கையில் இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 642  ஓட்டங்களைப் பெற்றநிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.
இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் சற்று முன்னர் மேற்படி இலக்கை கடந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Views: 817

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.