இந்திய அணி வென்றால் அவர்களுக்காக நிர்வாணமாக தோன்றுவதாக தெரிவித்த மொடல் அழகி பூனம் பாண்டே, இந்திய கிரிக்கெட் சபை அனுமதி அளித்தால், அத்திட்டத்தை தான் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது இந்திய அணிக்கு சிகிச்சையளிக்கும் பெறுமதியைக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பகிரங்கமாக நிர்வாணமாகத் தோன்றினால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என பலர் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனராம். இதனால் தற்போது அவரின் செல்லிடத் தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்திய கிரிக்கெட் சபை அனுமதித்தால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்காக தான் நிர்வாணமாகத் தோன்றத் தயார் என எனவும் அச்சுறுத்தல்கள் பற்றி தனக்கு கவலையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபைக்கு எழுதிய கடிதத்தில் "தீவிர கிரிக்கெட் ரசிகை என்ற வகையிலும் எல்லாவற்றையும்விட இந்திய தேசாபிமானி னஎ;ற வகையிலும் நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் இந்தியா உலகக்கிண்ண்தை வெல்வதற்காக இந்த ஒரு படி முன்செல்லும் நடவடிக்கையை மேற்கொள்ள நான் தயார்.
இந்திய அணியை உற்சாகப்படுத்தவும் உலகக் கிண்ணத்தை வெல்ல வைக்கவும் மேலதிக ஊக்கத்தை ஏற்படுத்தும் எனது ஆவலை நான் ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
20 வயதான பூனம் பாண்டே, தனது கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், "இந்திய வீரர்களை விளையாட்டு உணர்வை ஊக்குவிப்பதற்காக அவர்கள் தெரிவு செய்யும் எந்த இடத்திலும் நேரத்திலும் நிர்வாணமாக தோன்ற நான் தயார். இது மனிதர்களை ஊக்குவிக்கிறது என இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பொது இடத்தில் பகிரங்கமாக நிர்வாணமாகத் தோன்றுவது குற்றச்செயல் என்பதை நான் அறிவேன். ஆனால் வயது வந்தவர்களின் சம்மதத்துடன் தனிப்பட்ட ரீதியில் இப்படிதோன்றுவது குற்றமாகாது"என அவர்கூறியுள்ளார்.


Comments
பத்திரிகைகளுக்கும் வேறு வேலை இல்லை இவருக்கும் வேறு வேலை இல்லை போலும்!
ஓடவேண்டும் என்று தோன்றினால் ஒருவருக்கும் சொல்லாமல் துகிலுரிந்து ஓடி இருப்பார், நல்ல ODI
RSS feed for comments to this post