2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹிரோக்களுடனான நயனின் பந்தம்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 02 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த திரைப்படமான 'ஸ்ரீ ராமராஜ்ஜியம்' அவரை விருது நடிகையாக்கியதோடு, மீண்டும் அவர் திரையுலகில் கால்பதிக்கவும் வழிசமைத்தது.

அதனால்தான் அவர் திரும்பவும் நடிக்க வந்துவிட்டார் என்றதும் உடனடியாக 'கிருஷ்ணம் வந்தே ஜெகத்குருவும்' திரைப்படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர். அதனையடுத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நயன்தாராவை வாரிக்கொண்டனர்.

ஆனால் இப்போது 'கிருஷ்ணம் வந்தே ஜெகத்குருவும்' திரைப்படம் தோல்வியடைந்து விட்டது. இதனால் ஆந்திர படாதிபதிகள் மத்தியில் நயன்தாரா மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயங்கி வருகிறார்கள்.

ஆனால் சில ஆந்திர கதாநாயகர்கள் இன்னும் நயன்தாரா மீது ஈர்ப்புடன்தான் இருக்கிறார்களாம். அவர் ஒரு டூ இன் ஒன் நடிகை. அவரை கிளாமர், ஹோம்லி என இரண்டு விதமாகவும் பயன்படுத்தலாம் என்று நேரடி சிபாரிசு செய்கிறார்களாம்.

இதனால் நடிகர்களுக்காக படாதிபதிகளும் நயனை விட முடியாத நிலையில் இருக்கிறார்கள். இப்படி செகண்ட் இன்னிங்சிலும் ஹீரோக்கள் நயன்தாரா பக்கம் இருப்பதற்கு முக்கிய காரணம் அவரது அணுகுமுறைதானாம்.

தன்னுடன் நடிக்காத நடிகர்களாக இருந்தாலும் நட்பு வைத்திருப்பாராம். அவ்வப்போது ஹோட்டல்களில், பார்ட்டிகளில் சந்தித்து பரஸ்பரம் பரிமாறிக்கொள்வாராம். அந்த பந்தம்தான் நயனுக்கு பக்கபலமாக இருந்து வருகிறதாம்.




You May Also Like

  Comments - 0

  • SAKTHI Sunday, 06 January 2013 01:30 PM

    அவர் ஒரு டூ இன் ஒன் நடிகை. அவரை இரண்டு விதமாகவும் பயன்படுத்தலாம். அவ்வப்போது ஹோட்டல்களில், பார்ட்டிகளில் சந்தித்து பரஸ்பரம் பரிமாறிக்கொள்வாராம் பிரபுதேவாவைப் பிரிந்த நயன்தாரா மீண்டும்......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .