2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் கொலை

Editorial   / 2017 ஜூலை 13 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கன - தம்பான பிரதேசத்தில், கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில், நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று, இன்று வியாழக்கிழமை (13) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தம்பான, வெல்பல்லேவல பிரதேசத்தைச் சேர்ந்த, 37 வயதுடைய ஆணொருவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர், தம்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக, மஹியங்கன வைத்தியசாலையில் மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X