2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிராம சேவையாளர் பரீட்சை: பெறுபேறு வெளியிட அரசாங்கம் தயக்கம்

George   / 2017 ஜூன் 07 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிராம ​சேவையாளர் வெற்றிடங்களை நிரப்புவதை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

சுமார், 180,000 ஆயிரம் பேர் இந்தப் பரீட்சை எழுதியதுடன், அவர்களுக்கான பெறுபேறுகளை அளவிடும் பணிகள் பரீட்சை திணைக்களத்தால் நிறைவடைந்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையிலும் பெறுபேறுகளை வெளியிடுவதை அரசாங்கம் தாமதமாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .