2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'கந்தில்பாவை' நாவல் வெளியீடு

Kogilavani   / 2016 நவம்பர் 03 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயத்திரி விக்கினேஸ்வரன்

தேவகாந்தனின் 'கந்தில்பாவை'  நாவல் வெளியீடு, செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் 3 மணிக்கு, கரவெட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தெணியான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரவெட்டி பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு  வைத்ததுடன் நூலின் அறிமுகவுரையையும் நிகழ்த்தினார்.

1980 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் புரதான தலைநகராகக் கருதப்படும் கந்தரோடையையும், அதனைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்ட வரலாறு, ஐதீகம் என்ற இரட்டைத் தடங்களின் தன் புனைவுப் பயணத்தைச் நாவல் பதிவு செய்திருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .