2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புலவர் பார்வதிநாத சிவம் காலமானார்

Kogilavani   / 2013 மார்ச் 05 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த்

யாழ்ப்பாணத்தின் மூத்த புலவர் பார்வதிநாத சிவம் இன்று செவ்வாய்க்கிழமை தனது 77 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

14.01.1934 மாவிட்டபுரம் வீமன்காமத்தில் பிறந்த பார்வதிநாதசிவம், ஈழநாடு, முரசொலி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றி உள்ளார்..

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் மாணவனான இவர் சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனது மேற்படிப்பை நிறைவு செய்த பின் ஆசிரியர் சேவையில்  ஈடுபட்டு வந்தார்.

'காதலும் கருணையும்', 'இருவேறு உலகம்', 'இன்னுமொரு திங்கள்', 'இரண்டு வரம் வேண்டும்', 'பசிப்பிணி மருத்துவன்' ஆகிய ஐந்து நூல்களை இவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பார்வதிநாதசிவத்தின் தந்தையார் மகாலிங்கசிவமும் அவருடைய பாட்டியாரும் யாழ்ப்பாணத்தின் மூத்த புலவர்களாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .