2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் புர்கான் பீ. இப்திகாருக்கு விருது

Super User   / 2014 ஜனவரி 08 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிரேஷ்ட ஊடகவியலாளர் புர்கான் பீ. இப்திகார், ஹொரனை பிரதேச சபையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சரத்சந்திர ஜயகொடி சாஹித்திய விழாவையொட்டி நாடளாவிய ரீதியில் நாவல் போட்டியொன்று ஹொரனை பிரதேச சபையினால் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் புர்கான் பீ. இப்திகார் முதலிடத்தை பெற்றமைக்காகவே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, சமூக சேவகி இராஜேஸ்வரி கிருஷ்ணசாமி ஞாபகார்த்த பெண் படைப்பாளிகளுக்கான போட்டியில் புர்கான் பீ. இப்திகாருக்கு சிறப்பு பரிசொன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. கொழுந்து சஞ்சிகையின் ஆதரவில் அண்மையில் நடைபெற்ற இந்த போட்டியில் பெண் படைப்பாளிகள் பலர்  கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் புர்கான் பீ. இப்திகாரினால்  எழுதப்பட்ட 'பொட்டு வைத்த கற்கள்' என்ற சிறுகதைக்கே சிறப்பு பரிசு கிடைக்கப் பெற்றது.சிரேஷ்ட ஊடகவியலாளரான புர்கான் பீ. இப்திகாரின் ஊடக சேவையை பாராட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .