2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’மின்சார வாகன சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதால் எவருக்கும் பாதிப்பில்லை’

Menaka Mookandi   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது இந்த முழு உலகமும், பசுமைப் புரட்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வது தொடர்பில், அதிகளவில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறான வாகனங்களின் உருவாக்கத்துடன், அவ்வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான நிலையங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வாறாக சார்ஜ் நிலையங்களை, ஒழுங்கமைப்பது தொடர்பில், தற்போது இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் (நிறுவன தொடர்பாடல்) ஜயநாத் ஏரத் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள மின்சார வாகனங்களின் எண்ணிக்கை யாது? அவற்றுக்காக இயங்கிவரும் சார்ஜ் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ப: தற்போது இலங்கையில், சுமார் 5,500 மின்சார வாகனங்கள் பாவனையில் உள்ளன. அவற்றில் 4,500 வாகனங்கள், கார்களாகக் காணப்படுகின்றன. 1,000 மோட்டார் சைக்கிள்கள் காணப்படுகின்றன. இவ்வாகனங்களுக்காக இலங்கையில், 47 சார்ஜ் நிலையங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக, 10 ஓட்டல்களில் இந்த சார்ஜ் சேவை காணப்படுகின்றது. இவை தவிர, மேலும் 10 இடங்களிலும், இந்த சார்ஜ் வசதிகள் காணப்படுகின்றன.

கே: இதற்காகக் காணப்படும் சட்ட வரையறை யாது?

ப: தற்போது காணப்படும் மின்வலுச் சட்டத்துக்கமைய, குறித்தவோர் இடத்துக்கு மின்சாரத்தை வழங்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும், வாகனமொன்றுக்கு மின்சாரத்தை வழங்க, இச்சட்டத்தின் கீழ் முடியாது. அதனால், நாம் இங்கு கதைத்துக்கொண்டு இருக்கும் விடயதானம், சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

இருப்பினும், மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும்  அவற்றுக்கான சார்ஜ் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால், இவை தொடர்பான பிரிதொரு சந்தையே உருவாகியுள்ளது. அவற்றுக்கு ஏற்ற கட்டணக் கட்டுப்பாடு, நுகர்வோர் பாதுகாப்பைப் பேணல், தொழில்நுட்ப ரீதியில் தரத்தைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆதன் பிரகாரம், வாகனப் பயனாளர்களைப் போன்றே, மின்சார வாகனங்களைச் சார்ஜ் செய்யும் நிலையங்களை நடத்தி வருபவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கே: மின்சார சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, இதுவரை எடுக்கப்படவுள்ள நடவடிக்கை யாது?

ப: இதன் முதற்கட்டமாக, அமைச்சரவைக்கு இது தொடர்பில் அறிவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மின்வலுச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அதனூடாக, இவ்விடயம் தொடர்பான அதிகாரங்களை ஆணைக்குழுவிடம் கையளித்து, மின்சார விநியோகம் எனும் வாக்கியத்துக்குள், வாகனங்களுக்கும் மின்சாரம் வழங்கும் வகையில், மின்வலுச் சட்டத்தை திருத்தியமைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கிடையே, இவ்வருடத்தின் ஆரம்பக் காலத்தில், மேற்படி சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது.

பொருளாதார ரீதியில் நோக்குமிடத்து, கட்டணங்கள், பாதுகாப்பு போன்ற விடயங்கள், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்தல், சார்ஜ் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாவை என்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி வருகின்றோம்.

கே: இந்தத் துறையில் நீங்கள் அவதானித்த பிரச்சினைகள் யாவை?

ப: சார்ஜ் நிலையங்கள் என்ற ரீதியில் பார்த்தாலும் மின்சாரப் பாவனையாளர்கள் என்று பார்த்தாலும், அனைவரும் எதிர்நோக்கும ஒரே பிரச்சினை, மின்சாரத் தடையாகும். காரணம், சார்ஜ் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாகும். மின்சாரத் தடை ஏற்படும் போது, பாவனையாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது, மின்சாரக் கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக ஏற்படலாம். தொடர் மின்சார விநியோகத்தை மேற்கொண்டு பாவகையாளர்களும் நீடித்த சேவையை வழங்குவது தொடர்பான தரம் தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

நிலையங்களில் காணப்படும் சார்ஜ் இயந்திரங்களின் திரையில், எத்தனை வோட்டளவு மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகின்றன. இருப்பினும், சில நுகர்வோருக்கு, இது தொடர்பில் நம்பிக்கை இல்லை. அதனால், சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னரான வோட்டளவைக் காட்டும் வாசிப்பொன்று, சார்ஜ் நிலையங்களில் காணப்பட வேண்டும் என்று, நுகர்வோர் எதிர்ப்பார்க்கின்றனர்.

திரையில் காணப்படும் விடயங்களை மாற்றியமைக்க முடியும் என்பதால், சுதந்திரமாக வாசிப்பை பார்த்துக்கொள்ளக்கூடிய மாணி வாசிப்பொன்று அவசியம் என்று, நுகர்வோர் கருதுகின்றனர்.

இதேவேளை, சார்ஜ் செய்யப்பட்டதற்கான பற்றுச்சீட்டொன்றை விநியோகிப்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி உள்ளோம். இந்த மத்திய நிலையங்களில், கட்டணம் அறவிடுவதற்கு, இரு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று, கிலோவோட்களை மணித்தியாலங்களுக்கு அறவிடுதல். மற்றையது, நேரத்தின் அடிப்படையில் கட்டணம் அறவிடுவதாகும். இருப்பினும், நேரத்துக்கு ஏற்ப கட்டணம் அறவிடுவது தொடர்பில், நுகர்வோருக்கு நம்பிக்கை இல்லை. அதனால், நம்பிக்கைக்குரிய மாணி வாசிப்பு முறையொன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சார்ஜ் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பிலும், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சில மின்சார வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போது, சந்தையில் இருந்து மின் அழுத்தியொன்றையும் கொள்வனவு செய்ய முடியும் என்று நினைக்கின்றனர். அவற்றின் ஊடாக, நேரடியாக மின்சாரத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும் என்றும் கருதுகின்றனர். வாகனங்களின் பிளக்குகள், வாகனத்துக்கு வாகனம் வேறுபடுகிறது என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லீஃப் ரக வாகனம், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லீப் ரக கார்களில், 20 அம்பியர் ரக செருக்கிகளே காணப்படுகின்றன. இதற்குப் பொறுத்தமான செருக்கியொன்றின் விலை, சந்தையில் 10,000 ரூபாய்க்கும் அதிகமாகவே விற்பனைக்கு உள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், தரம் குறைந்த செருக்கிகளைக் கொள்வனவு செய்வதில், பாவனையாளர்கள் அக்கறை செலுத்துகின்றனர். இது, மிகவும் அபாயகரமான நிலைமையாகும். வாகனமொன்று, தொடர்ந்து சுமார் 10 மணித்தியாலங்கள் சார்ஜ் செய்யப்படும் போது, இந்த தரம் குறைந்த செருக்கிகள் சூடாகி, உருகிப்போய்விட வாய்ப்புள்ளது. இதனால், வீடுகளில் சார்ஜ் செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவது அவசியமாகும்.

கே: ஒழுங்குபடுத்தல் வேலைத்திட்டம், எக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படும்?

ப: இது தொடர்பான பொதுமக்களுக்கான கருத்தரங்கொன்று நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனூடாக, பல்வேறு தரப்பினரும் வழங்கும் யோசனைகளைத் அவதானத்திற்கொண்டு, தேவையான வரையறைகள், வழிமுறைகள், தரம் மற்றுட் கட்டள அறவீட்டு முறைகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்தப் புதிய திட்டம், இவ்வருட பிற்பகுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முதற்பகுதியில் செயற்படுத்தப்படவுள்ளன.

கே: கட்டணங்களில் மாற்றம் ஏற்படுமா?

ப: கட்டணங்களில் மாற்றம் ஏற்படாது. இருப்பினும், ஒரே மாத்திரியான கட்டண அறவீடொன்று தற்போது இடம்பெறுவதில்லை. தற்போது இலங்கையில், பல்வேறு வகையில் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டணம் அறவிடப்படுகின்றது. உதாரணமாக, கொழும்பை அண்மித்தப் பகுதிகளில், கிலோவோட்டுக்கு 50 ரூபாய் அறவிடப்படும் அதேவேளை, வெளிப் பிரதேசங்களில் 70 ரூபாய் அறிவிடப்படுகிறது. நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும், மின்சாரக் கட்டணம் ஒரே அளவில் காணப்படுகின்ற போதிலும், வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கு மாத்திரம், வௌ;வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இது அசாதாரண நடவடிக்கையாகும்.

கே: ஒழுங்குபடுத்தல் காரணமாக, சார்ஜ் நிலையங்களை நடத்துவோருக்கு பிரச்சினை ஏற்படாதா?

ப: இல்லை. சார்ஜ் நிலையங்களை நடத்திச் செல்பவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளன. ஆவர்களுக்கு வழங்கவேண்டிய கட்டணம் யாது? என்பது, அவ்வகையான பிரச்சினைகளில் ஒன்றாகும். புதிய தரங்களின் ஊடாக, இவ்வாறாக பிரச்சினைகளில் தலையிடவும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் முடிகிறது. எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்படாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X