2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 03.06.2019 - 07.06.2019

Editorial   / 2019 ஜூன் 10 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

03.06.2019

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ், ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 188 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு கொள்வனவில் அதிகளவு ஈடுபட்டனர்.

04.06.2019

டயலொக் அக்ஸியாடா, ஹற்றன் நஷனல் வங்கி, ஸ்ரீ லங்கா டெலிகொம் பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 184 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.

05.06.2019

ரமழான் நோன்புப் பெருநாள் பொது, வங்கி விடுமுறை காரணமாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

06.06.2019

நெஸ்லே லங்கா, சிரி ஹோல்டிங்ஸ், சம்பத் வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 126 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, செலிங்கே இன்சூரன்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது.கலப்பு ஈடுபாடு, அக்சஸ் என்ஜினியரிங், கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.

07.06.2019

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி, ஸ்ரீ லங்கா ரெலிகொம் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 169 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு, செலிங்கோ இன்சூரன்ஸ் வாக்குரிமையற்ற பங்குகள், டிஸ்டிலரீஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.

வாரத்தில் அ.ப.வி.சு 0.24% சரிவையும் S&P SL20 0.40% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 167 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .