2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 24.12.2018 - 28.12.2018

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

24.12.2018   

ஹற்றன் நஷனல் வங்கி, LOLC ஹோல்டிங்ஸ் மற்றும் லயன் பிரெவரி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் நேர் பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 326 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. செலிங்கோ இன்சூரன்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு மந்த கதியில் பதிவாகியிருந்தது.   

25.12.2018   

நத்தார் பண்டிகை பொது, வர்த்தக மற்றும் வங்கி விடுமுறை தினம் காரணமாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கவில்லை.   

26.12.2018   

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், LOLC ஹோல்டிங்ஸ் மற்றும் ஒடெல் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 670 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. மெல்ஸ்டாகோர்ப் மற்றும் சிலிங்கோ இன்சூரன்ஸ் ஆகிய பங்குகளின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.   

27.12.2018   

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 338 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. செலிங்கோ இன்சூரன்ஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.   

28.12.2018   

சிலோன் டொபாக்கோ கம்பனி, மெல்ஸ்டாகோர்ப் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் சுட்டிகள் மறை பெறுமதிகளைப் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 389 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகியவற்றின் மீது தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் அதிகளவு ஈடுபட்டனர்.   

வாரத்தில் அபவிசு 0.16% உயர்வையும் S&P SL20 0.23% உயர்வையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 431 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியிருந்தது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .