2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அரசியலில் குதிக்கிறார் அஞ்சலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினிமாவில் ஹீரோயினாக ஒரு ரவுண்ட்  வந்தபிறகு பல நடிகைகள் அரசியல் களத்தில் குதித்திருக்கின்றனர். ஹேமமாலினி,  ஜெயப்ரதா தொடங்கி இன்றைக்கு ரோஜா, விந்தியா,  நமீதா வரை அரசியலில் குதித்திருக்கின்றனர்.

தற்போது  கௌதமி, கஸ்தூரி போன்றவர்கள் அடிக்கடி தங்களது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தபட்டியலில் இணைந்திருக்கிறார் அஞ்சலி.

நடிகர் ஜெய்யை காதலிக்கிறார். சீக்கிரம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றுதான் இதுவரை அஞ்சலி பற்றி தகவல் வெளியாகிக்கொண்டிருந்தது.  திடீரென்று அவரது அரசியல் ஆசை வெளிப்பட்டிருக்கிறது. சமீபத்தில் டில்லிக்கு வந்த அவரை  காங்கிரஸ் கட்சி எம்.பி. கோதபள்ளி கீதா வரவேற்று நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளராக அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார்.

இது பற்றி அஞ்சலி கூறும்போது,  ‘எனக்கு அரசியல் பிடிக்கும். அதன்மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவேன். அரசியலில் கால்பதிக்க ஆவல் கொண்டுள்ளேன்’ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .