2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்திரமுகி மீது சந்தேகம்

Editorial   / 2020 மே 06 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்பாகத்தில் ரஜினி ஏற்ற வேட்டையன் மற்றும் ஜோதிகா நடித்த சந்திரமுகி பாத்திரம் என்பன அதிகமாக பேசப்பட்டன.

இதனையடுத்து, இரண்டாம் பாகத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தை ராகவா லோரன்ஸ் ஏற்று நடிக்கிறார். அத்துடன், 2ஆம் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகாவே நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தரப்பு பேசிவருகிறது.

விரைவில் இதுகுறித்து இயக்குநர் பி.வாசு ஜோதிகாவைச் சந்தித்து அவரிடம் கோல்ஷீட் கேட்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சந்திரமுகி வேடம் குறித்த சில சந்தேகங்கள் எழும்பியுள்ளது. முதல் கதைப்படி ஜோதிகா கங்கா என்ற வேடம்தான் ஏற்று நடித்தார். அவர் மீது சந்திரமுகி ஆவி பிடித்திருப்பது போல் தான் காட்சி சித்தரிக்கப்பட்டது. அப்படியென்றால் நிஜமான சந்திரமுகி ஜோதிகா கிடையாது.

அது வேறு ஒரு கதாபாத்திரம். லொஜிக் படி பார்த்தால் ஜோதிகா சந்திரமுகியாக நடித்தால் பொருத்தமாக இருக்காது, அந்த வேடத்தில் வேறு யாராவது நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதுபோன ஜென்ம கதையாக உருவாக இருப்பதால் ஜோதிகாவே கடந்த ஜென்மத்தில் சந்திரமுகியாக இருந்தார் என்பதாக கதை அமைக்கப்படும் பட்சத்தில் லொஜிக் பொருத்தமாகவே இருக்கும் என்று  இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .